நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

கொலை வாளினை எடடா ...பாவேந்தர்

கொலை வாளினை எடடா மிகு
கொடியோர் செயல் அறவே
குகைவாழ் ஒரு புலியே உயர்
குணமேவிய தமிழா!


அலைமா கடல் நிலம் வானிலுன்
அணி மாளிகை ரதமே
அவை ஏறிடும் விதமே யுன
ததிகாரம் நிறுவுவாய்!

வலியோர் சிலர் எளியோர் தமை
வதையே புரிகுவதா?
மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?
உலகாள உனது தாய் மிக
உயிர் வாதை யடைகிறாள்;
உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கலையே வளர் தொழில் மேவிடு!
கவிதை புனை தமிழா!
கடலே நிகர் படைசேர் கடு
விடநேர் கருவிகள் சேர்!

நிலமே உழு நவதானிய
நிறை யூதியம் அடைவாய்;
நிதி நூல் விளை! உயிர் நூல் உரை
நிச நூல் மிக வரைவாய்!

தலையாகிய அறமே புரி
சரி நீதி யுதவுவாய்!
சமமே பொருள் ஐனநாயகம்
எனவே முரசறைவாய்!

இலையே உணவிலையே கதி
இலையே எனும் எளிமை
இனி மேலிலை எனவே முரசறைவாய் முரசறைவாய்!

                                                           -பாவேந்தர் பாரதிதாசன்