நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

தேவார பதிகம் - கணவன் மனைவி உறவு மேம்பட ...

பதிகம்: (2:16)
தலம்திருமணஞ்சேரி
பண்இந்தளம்
சுவாமிபெயர்: மணவாளநாயகர்
தேவியார்: யாழ்மொழியம்மை  

பாடல்:
அயில் ஆரும் அம்புஅதனால் புரம்மூன்று எய்து,
குயில் ஆரும் மென்மொழியாள் ஒருகூறுஆகி,
மயில் ஆரும் மல்கிய சோலை மணஞ்சேரிப்
பயில்வானைப் பற்றி நின்றார்க்கு இல்லைபாவமே.

பொருள் : 
கூரிய அம்பினால் முப்புரங்களையும் எய்து அழித்துகுயில் போலும் இனிய மென்மையான மொழிபேசும் உமையம்மையை ஒரு கூற்றில் உடையவனாகிமயில்கள் வாழும் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருமணஞ்சேரியில் எழுந்தருளிய இறைவனைப் பற்றி 
நின்றார்க்குப் பாவம் இல்லை.