நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

14வது தலாய்லாமா (டென்சின் கட்சு)

என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியவன் மனிதன் தான்ஏனென்றால் அவன் பணம் சம்பாதிப்பதற்காக தனது ஆரோக்கியத்தை தியாகம் செய்கிறான். பிறகு இழந்த ஆரோக்கியத்தை திரும்பப் பெறுவதற்காக,  சம்பாதித்த பணத்தை தியாகம் செய்கிறான்பிறகு நிகழ்காலத்தை அனுபவிக்க மறந்து எதிர்காலத்தை எண்ணி கனவுலகில் மிதக்கிறான். அதன் விளைவாக  அவன் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தில் வாழ முடியாமல் தவிக்கிறான். தனக்கு இறப்பே இல்லையென்ற இறுமாப்போடு வாழ்கிறான். கடைசியில் வாழாமலே சாகிறான்


அர்த்தங்கள் மாறிவிட்டன

சுய நலம் மிக்க இந்த சமுதாயத்தில்

இரக்கம் காட்டுபவன், இளிச்சவாயன்
அக்கறை காட்டுபவன், அதிக பிரசங்கி
மரியாதை தருபவன், முட்டாள்
உதவி செய்பவன், புழைக்க தெரியாதவன்
குரல் கொடுப்பவன்,  வேலை வெட்டி இல்லாதவன்

பெண்கள் பற்றி சில சிக்கலான உண்மைகள்

  • அவர்கள் சேமிப்பில் அக்கறை உள்ளவர்கள். 
  • சேமிப்பில் அக்கறை உள்ளவர்கள் ஆனால் எப்பொழுதும் விலையுயர்ந்த ஆடைகளையே வாங்குவார்கள் 
  • விலையுயர்ந்த ஆடைகளையே வாங்குவார்கள்  ஆனால் அணிய எதுவுமில்லையென வருத்தபடுவார்கள் 
  • அணிய எதுவுமில்லையென வருத்தபடுவார்கள்  ஆனால் எப்போதும் அழகாக உடை அணிவார்கள் 
  • எப்போதும் அழகாக உடை அணிவார்கள் ஆனால் திருப்தி அடைய மாட்டார்கள் 
  • திருப்தி அடைய மாட்டார்கள் ஆனால் ஆண்கள் அவர்களை புகழ வேண்டுமென எதிர்பார்ப்பார்கள் 
  • ஆண்கள் அவர்களை புகழ வேண்டுமென எதிர்பார்ப்பார்கள்  ஆனால் ஆண்கள் அப்படி செய்தாலும் அவர்களை நம்பமாட்டார்கள் 

சர்வர் இளைஞன்

வாய்ப்பாட்டை மனப்பாடம் செய்ய பிடிக்காமல்
பள்ளியை விட்டு ஓடியவன்,
சாப்பாட்டை மனப்பாடம் செய்து ஒப்பிக்கிறான்..

"சர்வராக"...

I was Dying

First I was dying to finish high school and start college
And then I was dying to finish college and start working
And then I was dying to marry and have children
And then I was dying for my children to grow old enough for school so i could return to work
And then I was dying to retire
And now, I am dying ...and suddenly I realize I forgot to live

பூசனிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது என்பதை அறிய


“கீற்றெண்ணி முத்தித்துத் கீழாறினால் மாறி
வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்ததிலே
பாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும்
பூசனிக்காய் தோறும் புகல்”

ஒரு பூசனிக்காயின் கீற்றுகளை எண்ணிக்கொண்டு அதை மூன்று, ஆறு , ஐந்து, இவற்றால் பெருக்கி வரும் விடையை பாதியாக்கி மீண்டும் மூன்றால் பெருக்கினால் வருவது விதைகளின் எண்ணிக்கையாகும்

ஒரு பூசனியில் உள்ள கீற்றுகளின் எண்ணிக்கையை "X" என்க.
பாடலின் படி அதை 3,6,5 ஆகியவற்றால் பெருக்க கிடைப்பது "90X" ஆகும்.
அதை பாதியாக்கினால் கிடைப்பது "45X" ஆகும்
அதை மீண்டும் மூன்றால் பெருக்க கிடைப்பது "135X" ஆகும்

ஒரு பூசனியில் உள்ள கீற்றுகளின் எண்ணிகையை X=6 ஆறு எனக்கொண்டால் (135 * 6 = 810) 135 ஆறால் பெருக்க வேண்டும் கிடைப்பது 810 ஆகும் எனவே பூசனியில் உள்ள விதைகளின் எண்ணிக்கை 810 ஆகும்

ஏமாற்றம்

அழகான ஆண் முட்டாளாக இருந்தால் பெண் ஏமாற்றம் அடைகிறாள். அழகான பெண் புத்திசாலியாகவும் இருந்தால் ஆண்  ஏமாற்றம் அடைகிறான்

சீரியல் பல்பு

நமக்குத்தான் அது இண்டிகேட்டர் , ஆனா ஆட்டோகாரங்களுக்கும்  பெண்களுக்கும் அது சீரியல் பல்பு !

Tajmahal - The Symbol of love?



We know Tajmahal as symbol of love but lesser known facts are,
  • Mumtaz was Shahjahan's 4th wife out of his 7 wives (Great)
  • Shahjahan killed mumtaz's husband to marry her (Excellent)
  • Mumtaz died during her 14th delivery (Wow)
  • After her death Shahjahan married Mumtaz's sister (Amazing)
Where the Hell was LOVE?

அன்பு

அதிகாரத்தின் கீழ் அன்பு வருவது திருக்குறளில் மட்டும் தான்


GAME

GOALS             - Be clear & specific about what you want
ATTITUDE       - Focus on what's right in your world
MOTIVATION - Become the most positive enthusiastic person you know
EXCELLENCE - Commit to constant improvement and better your best

Dr.A.P.J.Abdulkalam - Former president of india


உடலை ஆளும் தச வாயுக்கள்

1. இதயத்தில் இயங்குவது பிராணன் (உயிர்க்காற்று)
2. உச்சர்க்கலத்திடை நிற்பது அபாணன் (மலக்காற்று
3. கந்தரசக் குழியிற் சந்திடை நிற்பது சமானன்( நிரவுக்காற்று)
4. நாபியினிற்பது உதானன்( ஒலிக்காற்று)
5. சரீர முழுவதும் வியாபித்திருப்பது வியானன் ( தொழிற்க்காற்று)
6. நீட்டமுடக்கலுங் கிளக்கலுஞ் செய்வது நாகன் (விழிக் காற்று)
7. உரோமம் புளகித்திமைப்பது கூர்மன் (இமைக் காற்று)
8. முகத்திடை நின்று தும்மலுஞ் சினமும் வெம்மையும் விளைவிப்பது கிருகரன்  (தும்மல் காற்று)
9. ஓட்டமும்இளைப்பும்வியர்த்தலும் விளைவிப்பது  தேவதத்தன் (கொட்டாவிக் காற்று)
10.உயிர்போகினும் போகாதுடலினை வீக்கித் தலைகிறுத்தகல்வது தனஞ்சயன் (கோமா போன்ற மயக்க நிலைசுய நினைவற்ற நிலை)

நல்லவர்கள்

நம்மை விட சிறந்த நடிகர்களைத்தான் நாம் நல்லவர்களாக ஏற்றுக் கொள்கிறோம்

Difference Between a Resume, Bio Data & CV


மூலிகைப் பொடிகளின் பெயர்களும் அதன் பயன்களும்

அருகம்புல் பொடி அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

நெல்லிக்காய் பொடி பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது

கடுக்காய் பொடி குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

வில்வம் பொடி அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

அமுக்கலா பொடி தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

சிறுகுறிஞான் பொடி சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

நவால் பொடி சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

வல்லாரை பொடி நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

தூதுவளை பொடி நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

துளசி பொடி மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

ஆவரம்பூ பொடி இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

கண்டங்கத்திரி பொடி மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

ரோஜாபூ பொடி இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

ஓரிதழ் தாமரை பொடி ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா

ஜாதிக்காய் பொடி நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

திப்பிலி பொடி உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

வெந்தய பொடி வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

நிலவாகை பொடி மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

நாயுருவி பொடி உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

கறிவேப்பிலை பொடி கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

வேப்பிலை பொடி குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

திரிபலா பொடி வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

அதிமதுரம் பொடி தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

துத்தி இலை பொடி உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

செம்பருத்திபூ பொடி அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

கரிசலாங்கண்ணி பொடி காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

சிறியாநங்கை பொடி அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

கீழாநெல்லி பொடி மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

முடக்கத்தான் பொடி மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.

கோரைகிழங்கு பொடி தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

குப்பைமேனி பொடி சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

பொன்னாங்கண்ணி பொடி உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

முருங்கைவிதை பொடி ஆண்மை சக்தி கூடும்.

லவங்கபட்டை பொடி கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

வாதநாராயணன் பொடி பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

பாகற்காய் பவுட்ர்  குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

வாழைத்தண்டு பொடி சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

மணத்தக்காளி பொடி குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

சித்தரத்தை பொடி சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

பொடுதலை பொடி பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

சுக்கு பொடி ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

ஆடாதொடை பொடி சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

கருஞ்சீரகப்பொடி சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

வெட்டி வேர் பொடி நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

வெள்ளருக்கு பொடி இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

நன்னாரி பொடி உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

நெருஞ்சில் பொடி சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

பிரசவ சாமான் பொடி பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

கஸ்தூரி மஞ்சள் பொடி தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

பூலாங்கிழங்கு பொடி குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

வசம்பு பொடி பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

சோற்று கற்றாலை பொடி உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

மருதாணி பொடி கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

கருவேலம்பட்டை பொடி பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.