நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

எம்.ஜி.ஆர் துப்பாக்கியால் சுடப்பட்ட நாள்

12 ஜனவரி 1967...

"யுவர் ஆனர். வழக்கில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். 'லைசென்ஸ் இல்லாத துப்பாக்கியால் ராதா சுட்டார்' என அரசுத் தரப்பு வக்கீல் சொல்வதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். 

துப்பாக்கியால் சுட்டதில் நானும் சாகவில்லை. ராமச்சந்திரனும் சாகவில்லை. யாரையும் கொல்லாத ஒரு துப்பாக்கிக்கு லைசென்ஸ் தேவையா?" எனக் கேட்க, அதிர்ந்தது நீதிமன்றம். ஆம் இது எம்ஜியார் சுடப்பட்ட வழக்கில் எம்.ஆர்.ராதா நீதி மன்றத்தில் கூறிய வார்த்தைகள்...

எம்.ஜி.ஆர் துப்பாக்கியால் சுடப்பட்டு 50 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், இன்றளவும் எம்.ஆர்.ராதா நடத்திய துப்பாக்கிச்சூட்டின் பரபரப்பு அவ்வளவு எளிதில் அடங்கிவிடவில்லை. 

என்ன நோக்கத்திற்காக ராதா துப்பாக்கியைத் தூக்கினார்? என்ற கேள்விக்குப் பதிலைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் சாதாரண மக்களிடம் மேலோங்கியே இருக்கிறது. 

1967-ம் ஆண்டு,  ஜனவரி 12ம் தேதி மாலை 5 மணிக்கு எம்.ஜி.ஆர் வீட்டில் துப்பாக்கி சூடு நடந்தது. தான் கொண்டு போயிருந்த துப்பாக்கியில் மூன்று தோட்டாக்களை மட்டுமே நிரப்பியிருந்தார் ராதா. 

எம்.ஜி.ஆரை நோக்கி துப்பாக்கியின் விசை அழுத்தப்பட, எம்.ஜி.ஆரின் இடதுகாதை ஒட்டி துப்பாக்கி ரவை துளைத்துக் கொண்டு போனது. பிறகு அதே துப்பாக்கியால் தனது நெற்றிப் பொட்டிலும், தோளிலும் இரண்டு குண்டுகள் பாய, ரத்த வெள்ளத்தில் மிதந்தார் எம்.ஆர்.ராதா. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் உயிர் பிழைத்தனர்.

"என் முகத்துக்கு நேராக குண்டு பாய்ந்துவந்தது. நான் எப்படிப் பிழைத்தேன்?" என தடயவியல் நிபுணர் சந்திரசேகரனிடம் (இராஜிவ் கொலை வழக்கு) ஆச்சர்யத்தோடு கேட்டார் எம்.ஜி.ஆர். 

ராதா பயன்படுத்திய ரவைகளை தீவிரமாக ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தார் சந்திரசேகரன். 

'அந்தத் துப்பாக்கி ரவைகள் பதினைந்து வருடங்களுக்கு முன்பு வாங்கப்பட்டவை. அவற்றை ஒரு டப்பாவில் போட்டு அடிக்கடி பயன்படுத்தும் மேஜை டிராயரில் வைத்திருந்தார். டிராயரில் இருந்த துப்பாக்கி ரவைகள் ஒன்றுக்கொன்று உருண்டு தேய்ந்ததால், ரவையின் மேல் பிணைக்கப்பட்டுள்ள கேட்ரிஜ் கேசின் பிடிமானம் தளர்ந்து போய்விட்டது. அதனால்தான் இரண்டு பேரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை' எம்ஜியாரிடம் விளக்கினார்.

துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு என்னவெல்லாம் காரணம் என அரசுத் தரப்பு,  நீதிமன்றத்தில் தெளிவாகவே எடுத்து வைத்தது. 

எம்.ஆர்.ராதாவின் வக்கீலாக என்.டி.வானமாமலை ஆஜரானார். ராதாவுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே நீண்டநாட்களாக இருந்து வரும் கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. 

தொழிலாளி திரைப்பட சூட்டிங்கின் போது எம்.ஜி.ஆர், எம்.ஆர். ராதா சம்பந்தப்பட்ட ஒரு காட்சியில், எம்.ஜி.ஆர், 

‘இந்த பஸ் இனி தொழிலாளர்களின் நம்பிக்கை நட்சத்திரம்' எனப் பேச வேண்டும். 

‘இந்த பஸ்தான் இனி தொழிலாளர்களின் உதயசூரியன்' என மாற்றிச் சொன்னார் எம்.ஜி.ஆர். 

இதனால் கடுப்பான எம்.ஆர்.ராதா, 

‘சினிமாவுக்குள்ள உன் கட்சி சின்னத்தைக் கொண்டு வராதே... வெளிய போய் மேடை போட்டு பேசு' என சண்டை போட்டிருக்கிறார். 

இதனால் கோபமான எம்.ஜி.ஆர் படப்பிடிப்பை நிறுத்த, தயாரிப்பாளர் சின்னப்பா தேவர் வந்து சமாதானப்படுத்தினார். 

இறுதியில் குறிப்பிட்ட அந்தக் காட்சியில் ‘நம்பிக்கை நட்சத்திரம்’ என்று பேசவைத்தார் சின்னப்பா. 

இதுதவிர, 'காமராஜரைக் கொல்ல சதி செய்யப்படுவதாகவும்' ராதா எழுதிய ஒரு கட்டுரை, எம்.ஜி.ஆரை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியிருந்தது. 

வழக்கு விசாரணையில், 'எம்.ஆர்.ராதாவை வளரவிடாமல் சினிமா வாய்ப்புகளை எம்.ஜி.ஆர் கெடுத்தார்' என்றெல்லாம் காரணம் சொல்லப்பட்டது.

'எம்.ஜி.ஆரும் அவருடைய துப்பாக்கியால் என்னை நோக்கிச் சுட்டார்' 

-என ராதா தரப்பில் சொல்லப்பட, அதை முறியடித்தது தடயவியல் துறை. கே.சி.பி. கோபாலகிருஷ்ணன், பி.சந்திரசேகரன் மற்றும் துப்பாக்கி நிபுணர் ஏ.வி.சுப்பிரமணியம் ஆகியோர் அடங்கிய குழு, வெடிக்கப்பட்ட 3 குண்டுகளும் ராதாவின் துப்பாக்கியில் இருந்து மட்டுமே வெளியேறியது என நிரூபித்தனர். 

இந்த சம்பவம் நடந்தபோது, கண்ணால் பார்த்த ஒரே சாட்சி. தயாரிப்பாளர் வாசு மட்டும்தான். அவர் தன்னுடைய சாட்சியத்தில், 

'எம்.ஜி.ஆரை சுட்டுவிட்டு அதே துப்பாக்கியால் இரண்டு முறை தன்னை சுட்டுக் கொண்டார் ராதா' என வாக்குமூலம் கொடுத்தார். 

'எம்.ஜி.ஆர் செல்வாக்குமிக்கவர் என்பதால் வாசுவை மிரட்டி பொய் சொல்ல வைக்கின்றனர்' என ராதா தரப்பில் வாதம் செய்தாலும், முடிவில் சிறைத்தண்டனைக்கு ஆளானார் ராதா.

நீதிமன்றத்தில் வாதம் நடந்தபோது பல சுவாரஸ்ய சம்பவங்களும் நடந்தன. 

'எம்.ஆர்.ராதா லைசென்ஸ்
இல்லாத துப்பாக்கியால் சுட்டார்' என அரசுத் தரப்பு வக்கீல் குற்றம் சாட்டிக் கொண்டே போக, ஒருகட்டத்தில் கடுப்பான ராதா, 

"யுவர் ஆனர். வழக்கில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். 'லைசென்ஸ் இல்லாத துப்பாக்கியால் ராதா சுட்டார்' என அரசுத் தரப்பு வக்கீல் சொல்வதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். துப்பாக்கியால் சுட்டதில் நானும் சாகவில்லை. ராமச்சந்திரனும் சாகவில்லை. யாரையும் கொல்லாத ஒரு துப்பாக்கிக்கு லைசென்ஸ் தேவையா?" எனக் கேட்க, அதிர்ந்தது நீதிமன்றம்.

துப்பாக்கிச் சூடு வழக்கு மிக விரைவாக நடந்தது. அதே ஆண்டு நவம்பர் 4-ம் தேதியன்று நீதிபதி லட்சுமணன் தீர்ப்பை வாசித்தார். 

'அரசியல் முன்விரோதம் காரணமாக ராதா தன் துப்பாக்கியால் எம்.ஜி.ஆரை சுட்டார். பிறகு தன்னைத்தானே இரண்டு முறை சுட்டுக்கொண்டார். இதை அரசுத்தரப்பு ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளது' எனக் கூறி,  

ராதாவுக்கு ஏழாண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து ராதா உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்தார். மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. 

மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். அங்கே தண்டனை காலம் ஐந்தாண்டுகளாகக் குறைக்கப்பட்டது. சிறையில் அவருடைய நன்னடத்தை காரணமாக நான்கு ஆண்டுகள் நான்கு மாதங்களில் அவர் விடுதலையானார்.

தண்டனைக் காலத்தில் அவரது சிறைக் கொட்டடியில் வெளிநாட்டு கைதி ஒருவரும் தங்கியிருந்தார். அந்தக் கைதிக்கு ராதா சமைத்துப் போட்ட கேசரியும், சாம்பாரும் ரொம்பவே பிடித்துப் போய்விட்டது. ஒருநாள் பேச்சுவாக்கில் ஒன்றைக் கேட்டார் ராதா. 

"ஏன்யா வெள்ளைக்காரா...உங்கள் ஊரில் எப்படி... 30 வருஷம் வக்கீலாக இருக்கறவர்தான் ஜட்ஜா வருவாரா?" எனக் கேட்க, அந்த வெளிநாட்டுக் கைதியும், 

"ஆமாம். எங்கள் ஊரிலும் அதே வழக்கம்தான்" எனச் சொல்ல, பலமாக சிரித்த ராதா, 

"அதெப்படிய்யா...முப்பது வருஷம் பொய்யை மட்டுமே வாழ்க்கையாக வச்சுட்டு வாதாடி சம்பாதிக்கற ஒருத்தர் ஜட்ஜா வந்து உட்கார்ந்ததும், 'மை லார்டுன்னு' சொல்றோமே. இந்த அநியாயம் வேறெங்காவது நடக்குமா?" 

-எனக் கேட்க, வெளிநாட்டுக் கைதி யோசனையில் ஆழ்ந்தாராம். அதுதான் எம்.ஆர்.ராதா.

துப்பாக்கிச் சூடு வழக்கில் இருந்து வெளியே வந்துவிட்டாலும், 1975-ல் இந்திரா காந்தி அரசின் நெருக்கடி நிலை அறிவிப்பின்பின்போது, மிசா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார் ராதா. 

'திராவிடர் கழகத்துடன் தொடர்பில்லை' என எழுதித் தந்தால் விடுதலை செய்வதாகக் கூறியும், நிபந்தனையை ஏற்க மறுத்து பதினொரு மாதங்கள் சிறையில் இருந்தார் எம்.ஆர்.ராதா. 

கடைசிவரை, எந்தப் பேச்சுவார்த்தையும் வைத்துக் கொள்ளாமல் இருந்த எம்.ஜி.ஆரும் ராதாவும் சந்தித்துக் கொண்டது பெரியாரின் இறப்பின்போதுதான். 

அப்போதுகூட, 'உங்களுக்கு பக்கத்தில் இருப்பவர்களை நம்ப வேண்டாம்' என ராதா கூறியதாகவும் ஒரு செய்தி உண்டு.

அதன்பின் மலேசியவில் நடந்த ஒரு கூட்டத்திற்குக் கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தார் நடிகவேள் எம்.ஆர்.ராதா. 

'அந்தக் கூட்டத்தில் #எம்ஜிஆர் ரசிகர்கள் உங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய இருக்கிறார்கள்' என விழா ஏற்பாட்டாளர்கள் சொல்ல, எதையும் அலட்டிக் கொள்ளாமல் கூட்டத்தில் பேசினார் ராதா.

"எம்.ஜி.ஆரை சுட்டுட்டேன்னு ஆளாளுக்கு கோஷம் போடறாங்க. உங்களுக்கு ஒன்னு சொல்லிக்கறேன். நானும் எம்.ஜி.ஆரும் ஐம்பது வருஷமாக நண்பர்களா இருக்கோம். 

எங்களுக்குள்ள சின்ன கோபம். செல்லமா சண்டை போட்டுட்டோம். அந்த சமயத்துல கம்பு இருந்திருந்தா கம்புச் சண்டை போட்டிருப்போம். துப்பாக்கிதான் இருந்துச்சு. சுட்டுக்கிட்டோம்"

இந்தியாவையே உலுக்கிய ஒரு வழக்கைக்கூட மிகச் சாதாரணமாகக் கடந்து போனார் எம்.ஆர்.ராதா. 

மலேசிய நிகழ்ச்சியை முடித்துவிட்டு தாயகம் திரும்பிய அவருக்கு  மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டதையடுத்து திருச்சி திரும்பினார். 

1979-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி இறந்தார். அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முன்வந்தாலும், ராதா குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். அரசு மரியாதையையும் ஏற்றுக் கொள்ளவில்லை.

நன்றி: ஆ.விஜயானந்த் | விகடன்

கெர்போட்ட_நிவர்த்தி


தினசரி காலண்டரில் "இன்று கெர்போட்ட_நிவர்த்தி" என்று ஒரு குறிப்பு கண்டேன் அப்படி என்றால் என்ன? ஏதேனும் விசேட நாளா

நீங்கள் சில நாட்காட்டியில் தேதி கிழிக்கும் போதுகெர்போட்ட ஆரம்பம்என்று இருப்பதை பார்த்து இந்த கேள்வி கேட்டுள்ளீர்களா?

சிலர் காலண்டரின் பின்பக்கம் என்றைக்கெல்லால் தமிழகஅரசு விடுமுறைன்னு பாக்கும்போதுலாம்கெர்போட்ட நிவர்த்திஎன்று ஒன்று இருப்பதையும் கவனித்திருப்பீர்கள் 

இது எதும் விசேட தினமோ அல்லது மார்கழி மாத கோவில் திருநாளோ அல்ல. உண்மையில் தமிழர்கள் அடுத்த வருட மழைக்கணிப்பு முறை, அதாவது "கரு ஓட்டம்" என்பதே கர்ப்ப ஓட்டம் என்று மாறி கர்ப்போட்டம் என்றாகி இன்று காலண்டர்களில் கெர்ப்போட்டம் என்று காண்கிறது

நம்முடைய தமிழகத்தில் சூரியனின் சுழற்சியை மையமாக கொண்ட சூரியவழி மாதங்கள் பின்பற்ற படுகிறது. இது தவிர வானியல் நட்சத்திரங்களை இருபத்தேழு மண்டலங்களாகவும் பன்னிரு ராசி மண்டலங்களாகவும் பிரித்துள்ளனர். அவ்வகையில் தனூர் மாதம் எனப்படும் மார்கழியில் சூரியன் தனூர் ராசி மண்டலத்தை கடக்கும் போது பூராட நட்சித்திரத்தை கடக்க பதினான்கு நாட்களை எடுத்து கொள்கிறது. இந்நாட்களில் கருமேகங்கள் தெற்கு நோக்கி நகருவதை கண்டுகொள்ளலாம்

இந்த பதினான்கு நாட்களும் கர்ப்போட்ட நாட்கள் ஆகும், அதாவது மழை கருக்கொள்ளும் நாள் அல்லது மேகம் சூலாகும் நாள். இதனை பெண்ணின் பத்துமாத கர்ப்பகாலத்துடன் ஒப்பிடுங்கள் மார்கழியில் கர்ப்பம் தரிக்கும் பெண் ஒருவள் ஒன்பது மாதம் கழித்து புரட்டாசிக்கு பின் பிள்ளை பெறுவாள்

அவ்வகையில் இந்த கர்போட்ட நாட்களில் மழை முறையாக சூல் கொண்டால் ஒன்பது மாதம் கழித்து அடுத்த ஆண்டில் ஐப்பசி கார்த்திகையில் மழைபொழிவு அளவும் முறையாக இருக்கும். இந்த கர்போட்ட நாட்கள் தோராயமாக டிசம்பர் 28 முதல் ஐனவரி 11ஆந் தேதி வரை அமைகிறது. 

ஒரு எளிய விவசாயிக்கு தனூர் மாதம் பூராடம் நட்சத்திரம்லாம் தெரியாது இல்லையா, 
எனவே மார்கழி மாதம் அமவாசையில் இருந்து அடுத்து வரும் பதினான்கு நாட்கள் "கர்போட்ட நாட்கள்" என்று நினைவில் வைத்து கொள்வார்கள்

இந்நாட்களில் லேசான தூறல் மெல்லிய சாரல் போன்ற மழை இருந்தால் மேகம் சரியாக கரு கட்டி இருக்கிறது என்று பொருள். எனவே வரும் அடுத்த ஆண்டு நல்ல மழையை எதிர்பார்க்கலாம். மாறாக கர்ப்போட்ட நாட்களில் கனமழை பெய்து சூறைக்காற்று வீசினாலோ கடும்வெயில் இருந்தாலோ மேகத்தின் கருக்கலைந்து விட்டது என்று பொருள். எனவே மார்கழியில் கன மழை பெய்தால் அடுத்த ஆண்டு பருவமழை பொய்க்கும் என அர்த்தம்

இன்றைய வாழ்க்கையின் மாறுபட்ட சூழலியல் கேடுகளும் பருவநிலை மாற்றமும் மேகத்தின் கருக்கலைக்கும் வில்லன்களாக உருவெடுப்பதால்தான் ஒவ்வொரு வருடமும் மழையளவு குறைகிறது. இந்த கர்போட்ட நாட்களை கணித்து இன்றும் திருநெல்வேலி பகுதிகளில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் மானாவாரி (வானம் பார்த்த பயிர்) பயிர்களை விதைக்கிறார்கள்.

நாம் இதுபற்றி எல்லாம் தெரியாமல் காலண்டரில் கர்ப்போட்டம் என்று பார்த்ததும் ஏதோ பண்டிகை என்று நினைத்து தேதியை கிழிப்பது போல பாரம்பரியத்தை கிழிக்கிறோம்

ஆங்கில கல்வியில் நம் பாரம்பரியத்தை இழந்து இன்று மழைவரும் நாட்களை தெரிந்துகொள்ள வானிலை அறிக்கைக்கு டீவியை பார்த்து கொண்டு அமர்ந்திருக்கிறோம்
புதுமையின் மோகத்தில் எத்தணை பழமைகளை இழந்து கொண்டிருக்கிறோம் நாம். 

கல்யாண மண்டபத்தில் ஆண்கள்

கல்யாண மண்டபத்தை கடந்து போகும் போது ஆண்களுக்கு ரெண்டே எண்ணம்தான் மனசுல ஓடும்...

1. இப்டியெல்லாம் நமக்கு எப்ப செஞ்சு வைப்பாங்க...?

2. இப்டிதானே நம்மளையும் வெச்சு செஞ்சாங்க

பவாரியா கொள்ளையர்கள்

எஸ்.ஆர்.ஜாங்கிட்
சமீபத்தில் வெளிவந்த 'தீரன்’ திரைப்படம், பவாரியா கொள்ளையர்கள் கதையை அடிப்படையாகக் கொண்டது. 10 ஆண்டு கொள்ளைச் சரித்திரத்தை தீரமிக்க தமிழகப் போலீஸார் 2006-ம் ஆண்டு முடிவுக்குக் கொண்டு வந்தது குறித்த உண்மைச் சம்பவத்தை பார்ப்போம்.
சமீபத்தில் வெளிவந்த கார்த்தி நடித்த 'தீரன்’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் திரைக்கதைக் காட்சிகள் பவாரியா கொள்ளையர்கள் பற்றிய உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது.
தமிழக போலீஸாரின் வீரத்தை வெளிப்படுத்திய பவாரியா கொள்ளையர்கள் விவகாரம் 2006-ம் ஆண்டு என்கவுண்டர் மூலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
1995-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை பத்தாண்டுகள் தென் மாநிலங்களில் கொடூரக் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை புரிந்து, சிக்காமல் திரிந்த பவாரியா கொள்ளையர்கள் வெறியாட்டம் போட்டனர். அவர்களின் அட்டூழியம் 2006-ம் ஆண்டு என்கவுண்டர் மற்றும் கைது மூலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
பவாரியா என்றால் உபி, அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளில் இயங்கும் கிரிமினல் குற்றவாளிகளை குறிக்கும் சொல். இவர்களை 'ஜட்டி பனியன் கேங்’, 'ஹபூடா கேங்’ என்றெல்லாம் அழைப்பார்கள். இவர்கள் 5 முதல் 10 பேர் கொண்ட குழுக்களாகத்தான் இயங்குவார்கள். பெரும்பாலும் கண்டெய்னர் லாரிகளில் நெடுஞ்சாலை ஓரங்களில்தான் தங்குவார்கள். மக்களை விட்டு விலகித்தான் வாழ்வார்கள்.
சாலையில் செல்லும் லாரிகளை திருடி அதை பயன்படுத்தித்தான் தங்குவார்கள். பின்னர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடுவார்கள். இவர்கள் கொள்ளையடிக்கப் போகும் போது மற்றவர்கள் இவர்களைப் பிடித்துவிடக் கூடாது, யாருக்கும் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக தங்கள் உடல் மற்றும் முகத்தின் மீது களி மண் அல்லது கரிய நிற எண்ணெயைப் பூசிக்கொண்டுதான் செல்வார்கள்.
பவாரியா குடும்பத்துப் பெண்கள் பகல் நேரத்தில் பிச்சை எடுப்பது போல் தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிடுவார்கள். பிறகு வீடுகள் குறித்து விவரங்களை குடும்பத்து ஆண்களுக்குச் சொல்ல, கொள்ளைக் கும்பல் இரவில் அந்த வீட்டைத் தாக்கும். அந்தத் தாக்குதல் கொடூரமாக இருக்கும். இரும்பு ராடு, கத்தி, நாட்டுத் துப்பாகி மூலம் தாக்குதல் நடத்துவார்கள்.
வீட்டில் உள்ளவர்கள் இவர்களுக்குப் பயுந்து பணிந்தாலும் அவர்களைக் கொடூரமாகத் தாக்கி அடித்தே கொல்வார்கள், இளம்பெண்களை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்குவார்கள். கொள்ளை அடித்த அடுத்த சில மணி நேரங்களில் அந்த நகரத்தை விட்டு, சுவடே தெரியாமல் மறைந்து விடுவார்கள்.
1995-ம் ஆண்டு தமிழகத்தில் கொள்ளையில் ஈடுபட்ட இவர்கள், தமிழக போலீஸாரின் கையில் சிக்காமல் போகவே அடுத்து வந்த 10 ஆண்டுகள் வெற்றிகரமாக தங்கள் கைவரிசையைக்  காட்டி வந்தனர். அவர்கள் கொலை செய்து கொள்ளை அடிப்பது அனைத்தும் புறநகர் பகுதிகளில் தனியாக இருந்த வீடுகளில் தான்.
கொள்ளை அடிக்க முடிவு செய்தால் அந்த வீட்டின் எப்படிப்பட்ட கதவாக இருந்தாலும் 5 முதல் 10 பேர் கொண்ட கும்பல் கடப்பாரையால் தாக்கி திறந்துவிடும். வீட்டிற்குள் நுழைந்தவுடன் துவம்சம் செய்துவிடுவார்கள். இவர்களது கொடூரத்தின் வெளிப்பாடாக தமிழகத்தின் இரண்டு முக்கிய அரசியல்வாதிகள் அவர்கள் வீட்டில் வைத்து கொல்லப்பட்டனர்.
கும்மிடிப்பூண்டி அதிமுக எம்.எல்.ஏ. சுதர்சனம் கொள்ளையர்களின் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவர் வீட்டிலிருந்து நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டன. இதேபோல் சேலத்தைச் சேர்ந்த பிரபல காங்கிரஸ் தலைவர் தாளமுத்து நடராஜன், பவாரியா கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரது வீட்டிலிருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது வட மாநில கொள்ளையர்கள் என்று பொதுவாக பத்திரிகைகள் எழுதினாலும் அது 'பவாரியா கொள்ளையர்கள்’ என்பது பலருக்கும் தெரியாது.
இந்த விவகாரம் பெரிதானதை அடுத்து, பவாரியா கொள்ளையர்களைப் பிடிக்க அப்போதைய கூடுதல் ஆணையரும் தற்போது டிஜிபியாக இருக்கும் எஸ்.ஆர்.ஜாங்கிட் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து கொள்ளையர்கள் பற்றியும் அவர்கள் பக்கத்து மாநிலத்தில் நடத்திய கொள்ளைச் சம்பவங்கள் பற்றியும் அவர்கள் செயல்படும் விதம் குறித்துமானத் தகவல்களைத் திரட்டினர்.
அப்போது தான் போலீஸாருக்கு பவாரியா கொள்ளையர் பற்றிய தகவல் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை அவர்களது மாநிலத்திற்கே சென்று பிடிக்க, போலீஸார் திட்டம் வகுத்தனர். ஜாங்கிட் வட மாநிலத்தவர் என்பதால் உடனடியாக உபி போலீஸாருடன் நிலைமையை விளக்கி நடவடிக்கை எடுக்க முடிந்தது.
2005-ம் ஆண்டு ஜாங்கிட் தலைமையில் தனிப்படை போலீஸார், வடமாநிலங்களில் முகாமிட்டு பல மாதங்கள் அங்கே தங்கி, மாறுவேடத்தில் கொள்ளையர்களைக் கண்காணித்தனர். டெல்லி, உபியில் இஸ்திரிக் கடை வண்டிக்காரராக, டீ விற்பவர்களாக, லாரி டிரைவர், கிளீனர்களாக, பழ வண்டிகாரர்களாக பல மாதங்களைச் செலவிட்டு கொள்ளையர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டினர்.
அது மார்ச் 2 2006 ஆம் ஆண்டு அதிகாலை, தாங்கள் திரட்டிய தகவலின் அடிப்படையில் ஜாங்கிட் தலைமையிலான போலீஸார் உபி அதிரடிப்படையின் உதவியுடன் தங்கள் ஆபரேஷனைத் தொடங்கினர். பவாரியா கொள்ளையர்களின் தலைவன் சத்யவீர்(எ) புரா, இவன் ஹரியானாவைச் சேர்ந்தவன். அவன் மீது 100க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, ஹரியானா, ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேச மாநிலங்களில் பதிவாகி இருந்தன.
தொடர் தேடுதலில் மீரட் அருகே உள்ள ஒரு வீட்டில், தனது கூட்டாளிகள் 3 பேருடன் புரா பதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்றால் ஆயுதங்களுடன் அவர்கள் தாக்ககூடும் என்பதால், திட்டம் போட்டு அந்த வீட்டை அதிகாலையில் தமிழக போலீஸார் சூழ்ந்தனர். ஆனால் போலீஸார் வரும் தகவல் அறிந்து புராவும் கூட்டாளிகளும் அருகிலுள்ள பர்டாபூர் கிராமப் பகுதியை ஒட்டிய காட்டுப் பகுதியில் பதுங்கினார்கள்.
உடனடியாக தமிழக போலீஸார் அங்கு தேடுதல் வேட்டையை நடத்தியபோது, புராவும் அவனது கூட்டாளிகளும் போலீஸாரை நோக்கி சரமாரியாகச் சுட தமிழக போலீஸார் திருப்பிச்சுட்டதில் புராவும் அவனது கூட்டாளியும் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் தப்பி விட்டனர். அந்த இடத்தில் இருந்து பல துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னர் தமிழக போலீஸார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் பவாரியா கொள்ளையர்கள்13 பேர், கைது செய்யப்பட்டு சென்னை கொண்டு வரப்பட்டு நீதிமன்றம் மூலம் சிறைத் தண்டனை வாங்கித்தரப்பட்டது.
பவாரியா கொள்ளையர்களை அவர்களிருக்கும் இடத்திற்கே சென்று, என் கவுண்டரில் இரண்டு பேரைக் கொன்று 13 பேரைப் பிடித்ததால் வந்த அச்சம் காரணமாகவும் பவாரியா கொள்ளையர்கள் பற்றிய தமிழக போலீஸாரின் அடுத்தடுத்த நடவடிக்கை காரணமாக தமிழகம் மட்டுமல்ல தென் இந்தியா பக்கமே கடந்த 11 ஆண்டுகளாக பவாரியா கொள்ளையர்கள் தலைவைத்துக் கூட படுக்கவில்லை.
வாழ்த்துக்கள் திரு.வினோத்நேர்த்தியான கதையாம் கதையமைப்பு, நிறைய தேடல்கள் மற்றும்  தகவல்கள்.

யோகாவும் தியானமும்


மனைவியிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டால்
அது "யோகா"

மனைவி திட்டுவதை காதில் வாங்கி கொள்ளாவிட்டால் 
அது "தியானம்"

யோகாவும் தியானமும் நம் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம் மக்களே...

நம்பிக் கட்டினோம்




மாமனார் வீட்டுல டிவி பாக்கும்போது இந்த விளம்பரம் அடிக்கடி வந்தா கடுப்பு ஆவீங்களா இல்லையா??..

 "நம்பிக் கட்டினோம்.. நன்றாக இருக்கிறோம்..."


பவளவிழா வாழ்த்துக்கள் தினத்தந்திக்கு


அன்றிலிருந்து இன்று வரை 
தன் தரத்தை குறைக்காத ஒரே நாளிதழ் 

வடையில இருக்க எண்ணையை சுத்தமா உறிஞ்சிடும்

சென்னையில் மழை

தொடங்கும் போது
காதலியைப் போல்
மகிழ்ச்சியாய் 
தெரிந்த மழை
தொடர்ந்து கொண்டே
இருப்பதால் 
மனைவியைப் போல்
தொல்லையாய்த்
தெரிகிறது
இன்னும் நீடித்தால்
மருமகளைப் போல்
வீட்டுக்குள் புகுந்து
நம்மை வெளியேற்றிவிடுமோ
என்றே தோன்றுகிறது..

Daylight saving time

Daylight saving time (DST) or summer time is the practice of advancing clocks during summer months by one hour so that in the evening daylight is experienced an hour longer, while sacrificing normal sunrise times. Typically, users in regions with summer time adjust clocks forward one hour close to the start of spring and adjust them backward in the autumn to standard time.

Wanna more in details, click here...