நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

Showing posts with label ஜனநாயகம். Show all posts
Showing posts with label ஜனநாயகம். Show all posts

தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்துக்கான பொன்விழா


மாநில அரசியல் களத்தில் அதிர்வலைகளை உருவாக்கிய நிகழ்வு அது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தியாகி சங்கரலிங்கனார், தமிழ்நாடு பெயர் சூட்டும் கோரிக்கை உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்துத் தொடர் உண்ணாவிரதம் இருந்தார். ஆனால், அந்தக் கோரிக்கையை முதல்வர் காமராஜர் ஏற்கவில்லை. உண்ணாவிரதத்திலேயே உயிர் பிரிந்தது சங்கரலிங்கனாருக்கு.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே ‘தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி’ என்று பெயர் வைத்த காங்கிரஸ் கட்சி, ஏன் மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் வைக்கத் தயங்குகிறது என்பது புரியாத புதிராகவே இருந்தது. சட்ட மன்றத்துக்குள் நுழைந்ததும் தனது கோரிக்கையை மீண்டும் திமுக வலியுறுத்தியது. 1957 மே 7 அன்று ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்பதை ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்ற வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டுவந்தது திமுக.

இறங்கிவந்த அரசு

தீர்மானத்துக்கு ஆதரவாக வெறும் 42 வாக்குகளே கிடைத்தன. எதிர்த்து விழுந்த வாக்குகள் 127. திமுகவின் முதல் தீர்மானம் முழுமையான தோல்வி. இருப்பினும், மேடைகளில் ‘தமிழ்நாடு’ பெயர் கோரிக்கையைத் தொடர்ந்து முன்வைத்தது திமுக. 1961 ஜனவரி 30 அன்று சோஷலிஸ்ட் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் சின்னதுரை, ‘மெட்ராஸ் ஸ்டேட்’ பெயர் மாற்றத் தீர்மானத்தைக் கொண்டுவந்தார். அந்தத் தீர்மானத்தை வெற்றிபெறச் செய்யும் வகையில், ஆளுங்கட்சியினர் வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கை சட்ட மன்றத்துக்கு உள்ளும் புறமும் எழுந்தது. குறிப்பாக, தமிழரசு கழகத்தினர் சட்ட மன்றத்துக்கு வெளியே நின்று குரலெழுப்பினர்.
அது தொடர்பான விவாதத்தை ஒரு மாதத்துக்குத் தள்ளிவைக்குமாறு கோரினார் முதலமைச்சர் காமராஜர். இது தாமதிக்கும் தந்திரம் என்று சொல்லி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. மூன்று நாட்களுக்கு இதே நிலைமை நீடிக்கவே, காமராஜர் அரசு கொஞ்சம் இறங்கிவந்தது. தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்வதற்குப் பதிலாக, நிர்வாகரீதியிலான கடிதப் போக்குவரத்துகளில் ‘தமிழ்நாடு’ என்று குறிப்பிடுவதற்குச் சம்மதித்தது. ஆனால், அந்த முடிவு எதிர்க்கட்சிகளுக்கு முழுமையான திருப்தியைத் தரவில்லை. அரை மனதுடன் ஏற்றுக்கொண்டாலும், முழு வெற்றியை நோக்கிச் செல்வதற்கு ஆயத்தமாகவே இருந்தனர்.

கம்பனும் சேக்கிழாரும்

இப்படி மாநில அளவில் ‘தமிழ்நாடு’ கோரிக்கை இருந்த நிலையில், அதனை இந்திய அளவுக்குக் கொண்டுசென்றவர்களுள் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் பூபேஷ் குப்தா முக்கியமானவர். ஆம், தமிழ்நாடு பெயர் சூட்டல் கோரி இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் தனிநபர் மசோதாவைத் தாக்கல் செய்தார் குப்தா. மாநில அரசு சட்டம் நிறைவேற்றி, அதற்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுப்பதைவிட, நேரடியாக மத்திய அரசே செய்துவிட சட்டத்தில் இடமிருக்கிறது என்பதால், அந்த முயற்சியை முன்னெடுத்தார் பூபேஷ் குப்தா.
அப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அண்ணா, குப்தாவின் மசோதாவை வெகுவாக ஆதரித்துப் பேசினார். அப்போது பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர், “சுமார் ஐந்நூறு வருடங்களுக்கு முன்பு வரைக்கும் ஒன்றுபட்ட தமிழ்நாடு என்ற ஒன்று இருந்ததே இல்லை. சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்றுதான் இருந்தது. வரலாற்றுரீதியாக நியாயப்படுத்த முடியாதபோது, எதற்காகப் புதிய பெயரை உருவாக்க முனைகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
அந்தக் கேள்விக்கு, பரிபாடல், பதிற்றுப்பத்து, மணிமேகலை, சிலப்பதிகாரம் உள்ளிட்ட இலக்கியங்களில் இருந்தெல்லாம் சான்றுகளை எடுத்துச்சொல்லி பதிலளித்த அண்ணா, கம்பனும் சேக்கிழாரும் தமிழ்நாடு என்ற பதத்தைப் பயன்படுத்தியிருப்பதைச் சுட்டிக்காட்டினார். அப்போதும் திருப்தியடையாத ஓர் உறுப்பினர், “தமிழ்நாடு என்று பெயரிடுவதால் உங்களுக்கு என்ன லாபம்?” என்று கேள்வி எழுப்பினார்.
“பார்லிமெண்ட்டை, லோக்சபா என்று பெயர் மாற்றியதில் என்ன லாபம் கண்டீர்கள்? கவுன்சில் ஆஃப் ஸ்டேட்ஸை ராஜ்யசபா என்று மாற்றியதில் என்ன லாபம்? பிரசிடெண்ட்டை ராஷ்டிரபதி ஆக்கியதால் என்ன லாபம்?’’ என்றவர், ‘‘தமிழ்நாடு என்ற பெயரைத்தான் நீங்கள் மாநிலத்துக்குக் கொடுத்தாகவேண்டும். மாநிலத்தின் பெயருக்கும் அதன் தலைநகரத்தின் பெயருக்கும் வேறுபாடு இருக்க வேண்டும்” என்பதை அழுத்தமாக வலியுறுத்தினார். என்றாலும், நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இருந்த அபரிமிதமான வலிமை காரணமாக ‘மெட்ராஸ் ஸ்டேட்’ பெயர் மாற்ற தனிநபர் மசோதா தோற்கடிக்கப்பட்டது.

தொடர் முயற்சி

பிறகு, மாநில முதலமைச்சர் பதவியிலிருந்து காமராஜர் விலகி, பக்தவத்சலம் முதல்வராகியிருந்த தருணத்தில் மீண்டும் ஒருமுறை, தமிழ்நாடு பெயர் சூட்டும் தீர்மானத்தைக் கொண்டுவந்தது திமுக. 23 ஜூலை 1963 அன்று திமுக சட்ட மன்ற உறுப்பினர் இராம.அரங்கண்ணல் கொண்டுவந்த அந்தத் தீர்மானத்தின் மீது பேசிய மாநில அமைச்சர் ஆர்.வெங்கட்ராமன், ‘‘தமிழ்நாடு என்று சொன்னால், வெளி உலகில் இருப்பவர்களுக்கு எப்படித் தெரியும்.. மெட்ராஸ் என்றால்தானே புரியும். அதுமட்டுமல்ல, மெட்ராஸ் என்று சொன்னால்தான், சர்வதேச அரங்கத்தில் கேட்கும் போது பெருமையாக இருக்கிறது” என்றார்.
அதுமட்டுமல்ல, ‘‘மாநிலத்தின் பெயரை மாற்றினால் பிற மாநிலத்துடனோ அல்லது வெளிநாட்டுடனோ போடப்பட்ட ஒப்பந்தங்களைத் திருத்த வேண்டியிருக்கும். அது தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்தும்” என்றார். அதற்கு எதிர்வினை ஆற்றிய திமுக, “கோல்ட் கோஸ்ட் என்ற நாடு கானா என்று பெயர் மாற்றம் அடைந்தபோது, எந்தவிதப் பிரச்சினையும் எழவில்லை. ஒரு நாட்டுக்கே எந்தப் பிரச்சினையும் இல்லை என்றால், மாநிலத்துக்கு எப்படிப் பிரச்சினை எழும்?” என்று கேட்டது.
வாதங்கள் வலுவாக எடுத்துவைக்கப்பட்டபோதும் சட்ட மன்றத்தில் எண்ணிக்கை பலம் இல்லாததால், தீர்மானம் தோல்வியடைந்தது. ஆக, எடுத்துக்கொண்ட முயற்சிகள் எல்லாம் தோல்விகண்ட நிலையில்தான் 1967-ல் ஆட்சியைப் பிடித்தது திமுக. அதே வேகத்தோடு பெயர் மாற்ற விவகாரத்தைக் கையில் எடுத்தது. மெட்ராஸ் ஸ்டேட் என்பதைத் தமிழ், ஆங்கிலம் என்ற இரண்டு மொழிகளிலும் ‘தமிழ்நாடு’ என்று மாற்றுவதற்கான தீர்மானம் தயாரிக்கப்பட்டது.

பெயர் சூட்டினார் அண்ணா!

1967 ஜூலை 18 அன்று சட்ட மன்றத்தில் தீர்மானத்தைக் கொண்டுவந்தார் முதலமைச்சர் அண்ணா. விவாதத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் பி.ஜி.கருத்திருமன், மெட்ராஸ் என்பது உலகறிந்த பெயர். தமிழ்நாடு என்பது அந்தப் புகழை இனிமேல்தான் எட்டவேண்டும். ஆகவே, ‘தமிழ்நாடு - மெட்ராஸ் ஸ்டேட்’ என்று பெயர் வைக்கலாமே என்று யோசனை சொன்னார். என்றாலும், இறுதியில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைவருமே ஒருமித்த எண்ணத்துக்கு வந்திருந்ததால், தமிழ்நாடு என்ற பெயர் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. பிறகு பேசிய முதலமைச்சர் அண்ணா, “தமிழ்நாடு” என்று மூன்று முறை அண்ணா உச்சரிக்க, மூன்று முறையும் ‘வாழ்க’ கோஷம் எழுப்பினர் சட்டமன்ற உறுப்பினர்கள்.
தமிழ்நாடு என்று பெயர் சூட்டக்கோரி, உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகி சங்கரலிங்கனாரின் பங்களிப்பையும் தமிழரசு கழகத்தின் தலைவர் ம.பொ.சிவஞானத்தின் தொடர் முயற்சிகளையும் பங்களிப்பையும் பதிவுசெய்து பேசினார் முதலமைச்சர் அண்ணா. அதோடு, ‘‘நாம் பெயர் மாற்றம் செய்வதாலேயே தனி நாடு ஆகவில்லை. இந்தியப் பேரரசின் ஒரு பகுதியாகவே நம்முடைய மாநிலம் இருக்கும்” என்பதையும் தெளிவுபடுத்தினார். அதன் நீட்சியாக, ‘‘தமிழ்நாடு அரசு - தலைமைச் செயலகம்” என்ற புதிய பெயர்ப்பலகை சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அமைக்கப்பட்டது. அண்ணாவின் மனத்துக்கு நெருக்கமான கோரிக்கை நிறைவேற்றப்பட்டதன் பொன் விழாவைத் தற்போது கொண்டாடுகிறது தமிழ்நாடு அரசு!
- ஆர்.முத்துக்குமார், எழுத்தாளர். ‘திராவிட இயக்க வரலாறு’

பவாரியா கொள்ளையர்கள்

எஸ்.ஆர்.ஜாங்கிட்
சமீபத்தில் வெளிவந்த 'தீரன்’ திரைப்படம், பவாரியா கொள்ளையர்கள் கதையை அடிப்படையாகக் கொண்டது. 10 ஆண்டு கொள்ளைச் சரித்திரத்தை தீரமிக்க தமிழகப் போலீஸார் 2006-ம் ஆண்டு முடிவுக்குக் கொண்டு வந்தது குறித்த உண்மைச் சம்பவத்தை பார்ப்போம்.
சமீபத்தில் வெளிவந்த கார்த்தி நடித்த 'தீரன்’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் திரைக்கதைக் காட்சிகள் பவாரியா கொள்ளையர்கள் பற்றிய உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது.
தமிழக போலீஸாரின் வீரத்தை வெளிப்படுத்திய பவாரியா கொள்ளையர்கள் விவகாரம் 2006-ம் ஆண்டு என்கவுண்டர் மூலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
1995-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை பத்தாண்டுகள் தென் மாநிலங்களில் கொடூரக் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை புரிந்து, சிக்காமல் திரிந்த பவாரியா கொள்ளையர்கள் வெறியாட்டம் போட்டனர். அவர்களின் அட்டூழியம் 2006-ம் ஆண்டு என்கவுண்டர் மற்றும் கைது மூலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
பவாரியா என்றால் உபி, அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளில் இயங்கும் கிரிமினல் குற்றவாளிகளை குறிக்கும் சொல். இவர்களை 'ஜட்டி பனியன் கேங்’, 'ஹபூடா கேங்’ என்றெல்லாம் அழைப்பார்கள். இவர்கள் 5 முதல் 10 பேர் கொண்ட குழுக்களாகத்தான் இயங்குவார்கள். பெரும்பாலும் கண்டெய்னர் லாரிகளில் நெடுஞ்சாலை ஓரங்களில்தான் தங்குவார்கள். மக்களை விட்டு விலகித்தான் வாழ்வார்கள்.
சாலையில் செல்லும் லாரிகளை திருடி அதை பயன்படுத்தித்தான் தங்குவார்கள். பின்னர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடுவார்கள். இவர்கள் கொள்ளையடிக்கப் போகும் போது மற்றவர்கள் இவர்களைப் பிடித்துவிடக் கூடாது, யாருக்கும் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக தங்கள் உடல் மற்றும் முகத்தின் மீது களி மண் அல்லது கரிய நிற எண்ணெயைப் பூசிக்கொண்டுதான் செல்வார்கள்.
பவாரியா குடும்பத்துப் பெண்கள் பகல் நேரத்தில் பிச்சை எடுப்பது போல் தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிடுவார்கள். பிறகு வீடுகள் குறித்து விவரங்களை குடும்பத்து ஆண்களுக்குச் சொல்ல, கொள்ளைக் கும்பல் இரவில் அந்த வீட்டைத் தாக்கும். அந்தத் தாக்குதல் கொடூரமாக இருக்கும். இரும்பு ராடு, கத்தி, நாட்டுத் துப்பாகி மூலம் தாக்குதல் நடத்துவார்கள்.
வீட்டில் உள்ளவர்கள் இவர்களுக்குப் பயுந்து பணிந்தாலும் அவர்களைக் கொடூரமாகத் தாக்கி அடித்தே கொல்வார்கள், இளம்பெண்களை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்குவார்கள். கொள்ளை அடித்த அடுத்த சில மணி நேரங்களில் அந்த நகரத்தை விட்டு, சுவடே தெரியாமல் மறைந்து விடுவார்கள்.
1995-ம் ஆண்டு தமிழகத்தில் கொள்ளையில் ஈடுபட்ட இவர்கள், தமிழக போலீஸாரின் கையில் சிக்காமல் போகவே அடுத்து வந்த 10 ஆண்டுகள் வெற்றிகரமாக தங்கள் கைவரிசையைக்  காட்டி வந்தனர். அவர்கள் கொலை செய்து கொள்ளை அடிப்பது அனைத்தும் புறநகர் பகுதிகளில் தனியாக இருந்த வீடுகளில் தான்.
கொள்ளை அடிக்க முடிவு செய்தால் அந்த வீட்டின் எப்படிப்பட்ட கதவாக இருந்தாலும் 5 முதல் 10 பேர் கொண்ட கும்பல் கடப்பாரையால் தாக்கி திறந்துவிடும். வீட்டிற்குள் நுழைந்தவுடன் துவம்சம் செய்துவிடுவார்கள். இவர்களது கொடூரத்தின் வெளிப்பாடாக தமிழகத்தின் இரண்டு முக்கிய அரசியல்வாதிகள் அவர்கள் வீட்டில் வைத்து கொல்லப்பட்டனர்.
கும்மிடிப்பூண்டி அதிமுக எம்.எல்.ஏ. சுதர்சனம் கொள்ளையர்களின் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவர் வீட்டிலிருந்து நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டன. இதேபோல் சேலத்தைச் சேர்ந்த பிரபல காங்கிரஸ் தலைவர் தாளமுத்து நடராஜன், பவாரியா கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரது வீட்டிலிருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது வட மாநில கொள்ளையர்கள் என்று பொதுவாக பத்திரிகைகள் எழுதினாலும் அது 'பவாரியா கொள்ளையர்கள்’ என்பது பலருக்கும் தெரியாது.
இந்த விவகாரம் பெரிதானதை அடுத்து, பவாரியா கொள்ளையர்களைப் பிடிக்க அப்போதைய கூடுதல் ஆணையரும் தற்போது டிஜிபியாக இருக்கும் எஸ்.ஆர்.ஜாங்கிட் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து கொள்ளையர்கள் பற்றியும் அவர்கள் பக்கத்து மாநிலத்தில் நடத்திய கொள்ளைச் சம்பவங்கள் பற்றியும் அவர்கள் செயல்படும் விதம் குறித்துமானத் தகவல்களைத் திரட்டினர்.
அப்போது தான் போலீஸாருக்கு பவாரியா கொள்ளையர் பற்றிய தகவல் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை அவர்களது மாநிலத்திற்கே சென்று பிடிக்க, போலீஸார் திட்டம் வகுத்தனர். ஜாங்கிட் வட மாநிலத்தவர் என்பதால் உடனடியாக உபி போலீஸாருடன் நிலைமையை விளக்கி நடவடிக்கை எடுக்க முடிந்தது.
2005-ம் ஆண்டு ஜாங்கிட் தலைமையில் தனிப்படை போலீஸார், வடமாநிலங்களில் முகாமிட்டு பல மாதங்கள் அங்கே தங்கி, மாறுவேடத்தில் கொள்ளையர்களைக் கண்காணித்தனர். டெல்லி, உபியில் இஸ்திரிக் கடை வண்டிக்காரராக, டீ விற்பவர்களாக, லாரி டிரைவர், கிளீனர்களாக, பழ வண்டிகாரர்களாக பல மாதங்களைச் செலவிட்டு கொள்ளையர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டினர்.
அது மார்ச் 2 2006 ஆம் ஆண்டு அதிகாலை, தாங்கள் திரட்டிய தகவலின் அடிப்படையில் ஜாங்கிட் தலைமையிலான போலீஸார் உபி அதிரடிப்படையின் உதவியுடன் தங்கள் ஆபரேஷனைத் தொடங்கினர். பவாரியா கொள்ளையர்களின் தலைவன் சத்யவீர்(எ) புரா, இவன் ஹரியானாவைச் சேர்ந்தவன். அவன் மீது 100க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, ஹரியானா, ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேச மாநிலங்களில் பதிவாகி இருந்தன.
தொடர் தேடுதலில் மீரட் அருகே உள்ள ஒரு வீட்டில், தனது கூட்டாளிகள் 3 பேருடன் புரா பதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்றால் ஆயுதங்களுடன் அவர்கள் தாக்ககூடும் என்பதால், திட்டம் போட்டு அந்த வீட்டை அதிகாலையில் தமிழக போலீஸார் சூழ்ந்தனர். ஆனால் போலீஸார் வரும் தகவல் அறிந்து புராவும் கூட்டாளிகளும் அருகிலுள்ள பர்டாபூர் கிராமப் பகுதியை ஒட்டிய காட்டுப் பகுதியில் பதுங்கினார்கள்.
உடனடியாக தமிழக போலீஸார் அங்கு தேடுதல் வேட்டையை நடத்தியபோது, புராவும் அவனது கூட்டாளிகளும் போலீஸாரை நோக்கி சரமாரியாகச் சுட தமிழக போலீஸார் திருப்பிச்சுட்டதில் புராவும் அவனது கூட்டாளியும் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் தப்பி விட்டனர். அந்த இடத்தில் இருந்து பல துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னர் தமிழக போலீஸார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் பவாரியா கொள்ளையர்கள்13 பேர், கைது செய்யப்பட்டு சென்னை கொண்டு வரப்பட்டு நீதிமன்றம் மூலம் சிறைத் தண்டனை வாங்கித்தரப்பட்டது.
பவாரியா கொள்ளையர்களை அவர்களிருக்கும் இடத்திற்கே சென்று, என் கவுண்டரில் இரண்டு பேரைக் கொன்று 13 பேரைப் பிடித்ததால் வந்த அச்சம் காரணமாகவும் பவாரியா கொள்ளையர்கள் பற்றிய தமிழக போலீஸாரின் அடுத்தடுத்த நடவடிக்கை காரணமாக தமிழகம் மட்டுமல்ல தென் இந்தியா பக்கமே கடந்த 11 ஆண்டுகளாக பவாரியா கொள்ளையர்கள் தலைவைத்துக் கூட படுக்கவில்லை.
வாழ்த்துக்கள் திரு.வினோத்நேர்த்தியான கதையாம் கதையமைப்பு, நிறைய தேடல்கள் மற்றும்  தகவல்கள்.

ஹலோ ... கொலம்பஸா ..

9 மாதத்தில் 11 முறை வெளிநாட்டுப் பயணம், பிரதமர் மோடியின் சாதனை பட்டியலில் ஒன்று. இவர் எந்த நாட்டு பிரதமர் என்று எல்லோருக்கும் சந்தேகம் தான் வருகிறது. காங்கிரஸ்காரர்கள் ராகுல் காந்தியை தேடி இப்போது தான் கண்டுபிடித்துள்ளார்கள். பி.ஜே.பி காரர்கள் மோடியை தேடிக் கொண்டிருக்கிறார்கள், எந்த நாட்டில் உள்ளார் என்று

உறைந்துகிடக்கிறது தமிழக அரசு

இன்றைய தமிழகத்தின் ஆளும் கட்சியின் நிலைமை குறித்து ஆனந்த விகடன் தலையங்கம்(23-Apr-2015)

விலகினால்... விலக்கப்படுவீர்கள் !

உறைந்துகிடக்கிறது தமிழக அரசு. ஆட்சி நிர்வாகத்தின் அத்தனை துறைகளிலும் சுணக்கம். அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள், எங்கே செல்கிறார்கள் என அதிகாரிகளுக்குக்கூடத் தெரியவில்லை. ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கும், அதன் தீர்ப்பும்தான் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் ஒரே பிரச்னை என்பதைப்போல இருக்கின்றன தமிழக அமைச்சர்களின் செயல்பாடுகள். சத்துணவு ஊழியர்களின் போராட்டம், போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம், பார்வையற்ற பட்டதாரிகளின் உண்ணாவிரதம என எல்லா திசைகளிலும் போராட்ட அறிவிப்புகளும், கோரிக்கைக் குரல்களும் ஒலிக்கின்றன. கேட்பதற்குத்தான் செவிகள் இல்லை.

ஜெயலலிதா வந்துதான் தொடங்கிவைக்க வேண்டும் என்பதற்காக, முடிக்கப்பட்ட பல அரசுத் திட்டங்கள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன. மேம்பாலங்கள், கட்டடங்கள், மின் உற்பத்தித் திட்டங்கள்... என அனைத்துத் துறைகளும் அடக்கம். ஆனால், அமைச்சர்களோ, கோயில் கோயிலாகச் சென்று அங்கப்பிரதட்சிணம் செய்கிறார்கள்.அக்கினிச் சட்டி தூக்குகிறர்கள். பால்குடம், பன்னீர்குடம், பறவைக்காவடி, யாகங்கள் என அம்மா பக்தியில் மட்டுமே திளைக்கிறர்கள்.

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டும் முயற்சியில், கர்நாடகம் அதிவேகமாகச் செல்கிறது. செம்மரக் கடத்தலின் பெயரால் ஆந்திராவில் 20 தமிழர்களைச் சுட்டுக் கொன்று, 104 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். 1,500 பேர் ஆந்திரா சிறைகளில் அடைக்கபட்டுள்ளனர். தமிழ்hநட்டின் வாழ்வாதாரம் தொடர்புடைய சட்டப் போராட்டங்களைப் புறந்தள்ளும் தமிழக அமைச்சரவை, சொத்துக் குவிப்பு வழக்கில் மட்டுமே தனது மொத்த கவனத்தையும் செலுத்தி வருகிறது.

தலைமைச் செயலகம் முதல் கடைநிலை கிராமப் பஞ்சாயத்து வரை 'முதலமைச்சர்' என்ற இடத்தில் ஜெயலலிதாவின் புகைப்படமே இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது. திரை அரங்குகளில் ஒளிப்பரப்படும் அரசின் விளம்பப் படங்களில் 'மக்களின் முதல்வர்' என்ற பாவனை கூட இல்லை. நேரடியாக 'முதல்வர் ஜெயலலிதா' என்றே சொல்கின்றனர். இது ஜனநாயகத்தைக் கேலிக்குள்ளாக்கும் அசிங்கம். கோடிக் கணக்கான ஏழைகள் வாழும் நாடு இது. அரசின் திட்டங்களை நம்பி, பசித்த வயிறுகள் காத்திருக்கின்றன. அரசு அலுவலகங்களில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கானோர் ஏறி இறங்குகின்றனர். தன்னில் இருந்து விலகிச் செல்லும் அரசாங்கத்தை, மக்கள் நிரந்தரமாக விலக்கி வைத்துவிடுவார்கள்.

அடுத்த தேர்தல் வரப்போவது தெரியும் தானே !


இந்திய நீதி

காட்டிலிருந்து அலறியடித்து ஓடிய பசுவைத் தடுத்த யானை, “ஏன் இத்தனை பயத்துடன் ஓடுகிறாய்?” எனக் கேட்டது.
காட்டில் உள்ள எல்லா எருமை மாடுகளையும்
பிடிப்பதற்கு அரசாங்கம் உத்தரவு போட்டிருக்கிறதுஎன்றது பசு.
நீ பசுதானே.. அப்புறம் ஏன் ஓடுகிறாய்?” என யானை கேட்க, “நான் பசுங்கிறது எனக்குத் தெரியும். ஆனா என்னை அரசாங்கம் பிடிச்சுதுன்னா நான் எருமையில்லை, பசுன்னு நிரூபிக்க 20 வருசமாயிடும்என்றது பசு.
இப்போது பசுவுடன் சேர்ந்து யானையும் ஓட ஆரம்பித்தது.